இன்றைய தினம் கொழும்பு - நீர்கொழும்பு - மட்டக்களப்பு உட்பட்ட இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் தொடர்பிலும் அவற்றின் பின்புலம் பற்றியும் தீவிரமாக ஆராய உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசேட குழுவொன்றை நியமித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
இரு வாரங்களுக்குள் விசாரணையை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய தாக்குதல்களில் 30க்கும் அதிகமான வெளிநாட்டவர் உள்ளடங்கலாக 207 பேர் உயிரிழந்துள்ளதாக (இதுவரை) அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment