அர்ஜுன ரணதுங்க மீதான தாக்குதல் முயற்சியின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்திருந்த போதிலும் அர்ஜுனவின் மெய்ப்பாதுகாவலர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாசுதேவ நானாயக்கார மற்றும் காமினி லொக்குகே ஆகியோர் நீதிமன்ற தீர்ப்பினை அவமதிக்கும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது குறித்து சட்டத்தரணிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
தனது மெய்ப்பாதுகாவலர் அவரது கடமையைச் செய்ததாகவும் தன்னை பெரமுனவினரே கொலை செய்ய முயன்றதாகவும் இச்சம்பவம் தொடர்பில் அர்ஜுன ரணதுங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment