எதிர்வருகின்ற ரமழானை முன்னிட்டு அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பானது (AUMSA) நாடளாவிய ரீதியில் மூன்று மொழிகளிலும் மாபெரும் கட்டுரைப் போட்டியொன்றை நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.
இப்போட்டியானது முதலாம் பிரிவு (14 வயது - 18 வயது) இரண்டாம் பிரிவு (18வயது - 25வயது) என இரண்டு வயதுப் பிரிவுகளாக, மூன்று மொழிகளிலும், அனைத்து இலங்கையர்களையும் உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (31.12.2019 இற்கு முன்னர் 18 வயதைப் பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்)
இப்போட்டியில் ஒவ்வொரு மொழியிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் வெற்றியாளர்களிற்கு பெறுமதியான பணப்பரிசில்களும், அடுத்த ஐந்து இடங்களைப் பெறும் மாணவர்களிற்கு ஆறுதல் பணப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட போட்டிக்கான கட்டுரைகள் யாவும் 15.05.2019 இற்கு முன்னர், "தேசிய கட்டுரைப் போட்டி, AUMSA, த.பெ.இல 2304, கொழும்பு, இலங்கை" எனும் முகவரியிற்கு பதிவுத் தபாலின் மூலம் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
முடிவுத் திகதியிற்கு பின்னர் கிடைக்கப்பெறும் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் ஒருவர் ஒரு ஆக்கத்தை மாத்திரமே அனுப்பி வைக்க முடியும்.
முழு விபரங்களுக்கு:
தொடர்புகளுக்கு:
English:
M.R.M. Nabeel
076 927 2228
Tamil:
M.R. Faiyaaz Ahamed
076 401 5125
Sinhala:
M.M.A Raheem
0713577375
-Adhil Ahamed
No comments:
Post a Comment