ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரை மற்றும் மேற்பார்வையில் 769 கிலோ 467 கிராம் கொகைன் இன்று கோனவல பகுதியில் பகிரங்கமாக அழிக்கப்பட்டுள்ளது.
2015 - 2017 வரையான காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட கொகைன் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ள அதேவேளை தமது பிரதேசங்களில் போதைப் பொருள் ஒழிப்புக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தகவல்களை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச அனுமதிபெற்ற தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment