மாகொல: 5 கிலோ ஹெரோயின் கொண்டு சென்ற நபர் கைது - sonakar.com

Post Top Ad

Thursday 18 April 2019

மாகொல: 5 கிலோ ஹெரோயின் கொண்டு சென்ற நபர் கைது


மாகொல பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஐந்து கிலோ ஹெரோயின் கொண்டு சென்ற நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



கிரிபத்கொடயைச் சேர்ந்த ஜீவன் பெரேரா எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் குறித்த நபர் விரட்டிப் பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையிலேயே பெருந்தொகை ஹெரோயின் ஜனாதிபதி தலைமையில் பகிரங்கமாக அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment