ஞாயிறு தாக்குதல்: இதுவரை 40 பேர் கைது! - sonakar.com

Post Top Ad

Tuesday 23 April 2019

ஞாயிறு தாக்குதல்: இதுவரை 40 பேர் கைது!


ஞாயிறு தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் நாடளாவிய ரீதியிலான தேடல் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.



கொழும்பு, மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம் உட்பட பல்வேறு இடங்களில் விசாரணைக்காக பலர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் நிபந்தனையின் பேரில் பொலிஸ் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இதேவேளை தாக்குதல்தாரிகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பலர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இப்பின்னணியிலேயே தற்போது 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளதுடன் அனைவரும் உள்நாட்டவர்கள் எனவும் பெரும்பாலானோர் சந்தேகிக்கப்படும் தேசிய தௌஹீத் ஜமாத்துடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment