3.2 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தினை கடத்திச் செல்ல முயன்ற ஸ்ரீலங்கன் ஊழியர் ஒருவரை சுங்க அதிகாரிகள் நேற்று காலை கைது செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
விமானம் ஒன்றில் புறப்படுவதற்காக காத்திருந்த நிலையில் வத்தளையைச் சேர்ந்த குறித்த நபர் பற்றிய தகவல் கிடைத்ததையடுத்து சுற்றி வளைப்பு இடம்பெற்றதாகவும் தங்கம் முற்றாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 1 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதாக விள்கமளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக விமான பணியாளர்கள் பலர் கடத்தல் விவகாரங்களில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.
No comments:
Post a Comment