2.2 லட்ச ரூபா பெறுமதியான 5000 மற்றும் 1000 ரூபா கள்ள நோட்டுகளுடன் கொத்மலை பகுதியில் 38 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபரிடமிருந்து 44 ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 1000 ரூபா நோட்டொன்றும் பெறப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
உடவெல்ல பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment