கடந்த ஞாயிறு தினம் நாட்டை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்ட குழுவினரோடு தொடர்புடைய 139 பேர் இதுவரை அடையாளங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அவசரகால சட்டம் அமுலுக்கு வந்துள்ள நிலையில் தொடர் சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment