உயிரிழந்தோர் தொகை (இதுவரை) 138: தேசிய வைத்தியசாலைகள் பணிப்பாளர்! - sonakar.com

Post Top Ad

Sunday 21 April 2019

உயிரிழந்தோர் தொகை (இதுவரை) 138: தேசிய வைத்தியசாலைகள் பணிப்பாளர்!


இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் இதுவரை உயிரிழந்தோர் தொகை 138 என தகவல் வெளியிட்டுள்ளார் தேசிய வைத்தியசாலைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க.


மஹாராஜா செய்தி நிறுவனம் இவ்வெண்ணிக்கை 160 எனவும், மேலும் சமூக வலைத்தளங்களில் எண்ணிக்கை 200ஐத் தாண்டி விட்டதாகவும் தகவல்கள் பரிமாறிக்கொண்டுள்ள நிலையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் 49, நீர்கொழும்பில் 62 மற்றும் மட்டக்களப்பில் 27 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment