SLFPயினரை நம்ப முடியாது: திலும் பாய்ச்சல்! - sonakar.com

Post Top Ad

Thursday 14 March 2019

SLFPயினரை நம்ப முடியாது: திலும் பாய்ச்சல்!


கூட்டணியாக இயங்குவதாகத் தெரிவித்து விட்டு வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது எழுந்து சென்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மீண்டும் தமது சுயரூபத்தைக் காட்டியிருப்பதாகவும் அவர்களை இனியும் நம்ப முடியாது எனவும் விசனம் வெளியிட்டுள்ளார் மஹிந்த அணியின் திலும் அமுனுகம.


கடந்த ஒக்டோபரில் மலர்ந்த மைத்ரி - மஹிந்த நட்புறவின் அடிப்படை தொடர்ந்தும் மர்மமாகவே இருக்கின்ற நிலையில் மஹிந்த அணியினர் தம்மை உபயோகப்படுத்துவதை அனுமதிக்கப் போவதில்லையென தெரிவிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்வதைத் தவிர்த்ததுடன் ஏலவே மைத்ரிபாலலையே தமது ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளனர்.


இந்நிலையில், இப்போதுதான் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமையும் பெரமுனவின் தீவிர உறுப்பினர்கள் தொடர்ந்தும் சு.க எதிர்ப்பு நிலைப்பாட்டையே வெளிக்காட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment