கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கதிரியக்கவியல் பிரிவு (Radiology Department)மற்றும் உள்ளக மேம்பாலம் என்பன மக்கள் பாவனைக்காக இன்று (18) திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வானது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.ரகுமான் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார,சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் கலந்து சிறப்பித்தார் மேலும் நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் ஊழியர்கள்,பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-எம்.என்.எம்.அப்ராஸ்
No comments:
Post a Comment