ஐ.எஸ் அமைப்பினரால் பிரகடனப்படுத்த கலீபத்து ஐந்து வருட காலத்தில் வீழ்த்தப்பட்டு விட்டதாக அமெரிக்க அனுசரணையில் இயங்கும் சிரிய குழுவான SDF (Syrian Democratic Forces) அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் பதற்ற நிலையைத் தக்க வைத்துக்கொள்ள அமெரிக்காவினால் உருவாக்கப்பட்டதாகவும் விமர்சிக்கப்படும் ஐ.எஸ்ஸுக்கு எதிரான தாக்குதல்கள் ஊடாக சிரியாவில் உள்நாட்டுப் புரட்சிக்கும் வித்திடப்பட்டிருந்தது. எனினும், ரஷ்ய தலையீடு கள நிலவரத்தை மாற்றியமைத்ததையடுத்து தற்போது இஸ்ரேல் ஊடாக வேறு வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்றைய தினம் ISISன் கலீபத்தை வீழ்த்தி விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment