வவுனியா: புதையல் தோண்டிய நால்வர் கைது! - sonakar.com

Post Top Ad

Saturday, 23 March 2019

வவுனியா: புதையல் தோண்டிய நால்வர் கைது!


வவுனியா, புளியங்குளம் வனப்பகுதியில் புதையல் தோண்டிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் புராதன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


பெகோ இயந்திரம் கொண்டு இந்நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்ததாகவும், அநுராதபுர இராசதானி காலத்துக்குரிய  புராதன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, திருகோணமலை, புளியங்குளம் மற்றும் தலவாக்கல பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment