ஐரோப்பிய யூனியனிலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கான செயற்திட்டத்திற்கு நாடாளுமன்ற அங்கீகாரத்தைப் பெறுவதில் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார் பிரதமர் தெரேசா மே.
ஏலவே பிரெக்சிட் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன் வைக்கப்பட்டிருந்தது. எனினும் அதில் அவர் தப்பிக் கொண்ட நிலையில் மீண்டும் இன்று அவரது மாற்று யோசனை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், 391:242 எனும் வாக்கு அடிப்படையில் தெரேசா மே மீண்டும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment