போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பெராமுல்ல சமீர என அறியப்படும் பாதாள உலக பேர்வழியும் சகாக்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வத்தளை, பெலியவத்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு போதைப்பொருள் தொகையும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மாதங்களில் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் உக்கிரமாக இருக்கும் என ஜனாதிபதி கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment