வெள்ளையின மேன்மை: அன்டர்ஸ் பிரீவிக் வழியில் பிரன்டனும் 'சமிக்ஞை' - sonakar.com

Post Top Ad

Saturday 16 March 2019

வெள்ளையின மேன்மை: அன்டர்ஸ் பிரீவிக் வழியில் பிரன்டனும் 'சமிக்ஞை'



வெள்ளையின மக்களின் மேன்மை வாத அடிப்படையில் உலகில் பயங்கரவாத செயல்கள் முடுக்குவிடப்பட்டுள்ளதன் தொடர்ச்சியில் நியுசிலாந்தில் நேற்றைய தினம் 49 உயிர்களைப் பலியெடுத்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.


அதிக பட்சமாக 27 வருடங்கள் சிறைத் தண்டனையே கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சிறை நேற்றைய தாக்குதலை நடாத்திய பிரன்டன் ஹரிசன் டரன்ட் எனும் 28 வயது அவுஸ்திரேலிய பிரஜை, தான் ஒரு வெள்ளையின மேன்மைவாதப் பயங்கரவாதியென பிரகடனப்படுத்தியிருந்த நிலையில் இன்று நீதிமன்றுக்குள் வைத்தும் நோர்ர்வேயில் 2011ம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலை நடாத்தியிருந்த அன்டர்ஸ் பிரீவிக் போன்றே விரல் மூல சமிக்ஞை வெளியிட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.


பிரன்டன் தனது தாக்குதல் விபரங்களை முன் கூட்டியே வெளியிட்ட இணையத்தளத்தில் தாக்குதலின் பின் பெருமளவு ஆதரவுக் கருத்துக்களும் முஸ்லிம் மற்றும் குடிவரவாளர்கள் எதிர்ப்பு கருத்துகளும் வலுத்துள்ளமையம் பல மேற்கு நாடுகளில் இச்சம்பவம் வாத விவாதங்களை உருவாக்கியுள்ளமையும், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பள்ளிவாசல்கள் தொடர்பில் பாதுகாப்பு துறையினர் கவனம் திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment