கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவரைக் கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரி மீது கத்திக் குத்து மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றைய தினம் கொரகல்லயில் இடம்பெற்றுள்ளது.
இப்பாகமுவயைச் சேர்ந்த 22 வயது நபர் ஒருவரே இவ்வாறு பொலிஸ் அதிகாரியைத் தாக்கியுள்ளதுடன் குறித்த நபரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பிரதேசத்தில் பாதாள உலக பேர்வழியாக வளர்ந்து வரும் குறித்த நபர் குறித்து இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்தே சுற்றிவளைப்பு நடந்ததாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
No comments:
Post a Comment