சிறுபான்மை சமூகத்துக்கு 'நான்' தான் தீர்வு கொடுக்க முடியும்: கோத்தா! - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 March 2019

சிறுபான்மை சமூகத்துக்கு 'நான்' தான் தீர்வு கொடுக்க முடியும்: கோத்தா!


சிறுபான்மை சமூகத்தினர் எதிர்நோக்கும் சூழ்நிலைகளுக்கு தீர்வையளிக்கக் கூடிய சரியான நபர் தானேயென தெரிவிக்கிறார் கோட்டாபே ராஜபக்ச.



நாரேஹன்பிட்டவில் 20ம் திகதி நடாத்திய செய்தியாளர் மாநாட்டில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், தன்னை சிறுபான்மை சமூகங்கள் ஆதரித்து ஏற்றுக்கொள்ளும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சிறுபான்மை சமூகம் என பொதுவாக அவர் தெரிவித்துள்ள போதிலும் முஸ்லிம் சமூக வாக்குகளை இலக்காக வைத்தே அவர் இவ்வாறு பேசியுள்ளதாகவும் கிறீஸ் யக்கா முதல் திகன வரை காணப்பட்ட இனவாத முத்திரைகளை மக்கள் அறிவார்கள் எனவும் கொழும்பு அரசியல் தலைமைகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment