ஆறு மாதங்களில் பெரமுனவிலிருந்து 'புதிய' ஜனாதிபதி: பிரசன்ன - sonakar.com

Post Top Ad

Friday 29 March 2019

ஆறு மாதங்களில் பெரமுனவிலிருந்து 'புதிய' ஜனாதிபதி: பிரசன்ன


இன்னும் ஆறு மாதங்களில் பெரமுனவிலிருந்து புதிய ஜனாதிபதியொருவர் ஆட்சிப் பொறுப்பையேற்பார் என அடித்துக் கூறுகிறார் பிரசன்ன ரணதுங்க.


மஹிந்த ராஜபக்ச போட்டியிட முடியாத நிலையில் கோட்டாபேயை முன்னிறுத்தி பெரமுன தரப்பு நம்பிக்கையை வளர்த்து வருகிறது. எனினும், தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னரே தனது அமெரிக்க குடியுரிமையைக் கைவிடப் போவதாக கோட்டாபே தெரிவிக்கிறார்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலே முதலில் நடக்கும் எனவும் ஆரூடம் கூறப்பட்டு வருகின்றமையும் பிரசன்ன அதனடிப்படையில் ஆறு மாதங்களில் புதிய ஜனாதிபதி பொறுப்பேற்கப் போவதாக தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment