வெளியுறவுத்துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்: விமல் - sonakar.com

Post Top Ad

Saturday 30 March 2019

வெளியுறவுத்துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்: விமல்


வெளியுறவுத்துறையை அமைச்சினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.



ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள தீர்மானத்தை நிராகரிப்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பது உண்மையானால் தற்பேதைய ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி ஏ.எல்.ஏ அசீஸை திருப்பியழைப்பதோடு வெளியுறவுத்துறை அமைச்சையும் பொறுப்பேற்க வேண்டும் என விமல் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் மாரப்பன மீது எவ்வித நம்பிக்கையுமில்லையெனவும் யுத்த குற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment