2 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் குடு தோனி என அறியப்படும் 28 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வெலிகம பகுதியில் பிரபலமான குடு பாலிகா எனும் பெண்ணின் புதல்வியே இவ்வாறு குடு தோனியென அறியப்படுவதோடு மாத்தறை, மிரிஸ்ஸ பகுதியில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
மாகந்துரே மதுஷிடமிருந்தே போதைப் பொருட்களை குறித்த நபர் கொள்வனவு செய்து விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment