யாழ், அரியாலை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை கைது செய்ய முனைந்த பொலிசார் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், அங்கு படையினர் மேலும் குவிக்கப்பட்டு மூன்று பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளதுடன் சந்தேக நபர்கள் நாளை நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment