டுபாயிலிருந்து திருப்பியனுப்பப்பட்டிருந்த நிலையில் கைதாகியுள்ள கஞ்சிபானை இம்ரானிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் பின்னணியில் புதிய பாதாள உலக பேர்வழிகளின் விபரங்களை பொலிசார் திரட்டியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேலும் விரிவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த நபரின் துணைவி மீது அண்மையில் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டிருந்தமை தொடர்பிலும் பொலிஸ் விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment