நியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச், பள்ளிவாசல் தாக்குதலின் போது பயங்கரவாதியை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த பாகிஸ்தானிய பிரஜை நயீம் ராஷிதுக்கு தேசிய விருது வழங்கப்படும் எனவும் அவர் மாவீரர் எனவும் தெரிவித்துள்ளார் பாக். பிரதமர் இம்ரான் கான்.
வெள்ளையின மேன்மைவாதப் பயங்கரவாதியின் தாக்குதலுக்குப் பலியான பாகிஸ்தானியரின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் ஆறுதல் தெரிவித்துள்ள அவர், அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், லின்வுட் பள்ளிவாசலில் பயங்கரவாதி பிரன்டன் விரட்டியடிக்கப்பட்டமை தொடர்பில் பல புதிய தகவல்களும் வெளியாகி வருவதுடன் கிறடிட் கார்ட் இயந்திரத்தால் பயங்கரவாதி தாக்கப்பட்டது தொடர்பிலும் சாட்சிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
We stand ready to extend all our support to the families of Pakistani victims of the terrorist attack in Christchurch. Pakistan is proud of Mian Naeem Rashid who was martyred trying to tackle the White Supremacist terrorist & his courage will be recognized with a national award.— Imran Khan (@ImranKhanPTI) March 17, 2019
No comments:
Post a Comment