நியுசிலாந்து தாக்குதலால் 'அதிர்ச்சியும் கவலையும்': மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Saturday 16 March 2019

நியுசிலாந்து தாக்குதலால் 'அதிர்ச்சியும் கவலையும்': மைத்ரி!


நியுசிலாந்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தமக்கு அதிர்ச்சியையம் கவலையையுமளிப்பதாக தெரிவித்துள்ளார் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


வெள்ளையின மேன்மை வாத கொள்கையடிப்படையிலான வலதுசாரி பயங்கரவாதி பிரன்டனால் மூன்று மாதங்களுக்கு மேல் திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களினால் தொழுகைக்காக பள்ளிவாசல் சென்றிருந்த 3 வயது, 14 வயது சிறுவர்கள், ஆண்கள் - பெண்கள் உட்பட 49 பேர் உயிரிழந்துள்ளனர்.



இந்நிலையில், இச்சம்பவம் பற்றி கேள்வியுற்றதும் தாம் அதிர்ச்சியுடன் கவலையடைந்ததாக ஜனாதிபதி மைத்ரிபால தனது அனுதாபத் தகவலில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment