நியுசிலாந்து தாக்குதலுக்கு ACJU கண்டனம் - sonakar.com

Post Top Ad

Tuesday 19 March 2019

நியுசிலாந்து தாக்குதலுக்கு ACJU கண்டனம்


15.03.2019 அன்று நியுஸிலாந்தின் பள்ளி வாசலில் அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது. இவ்வாறான தாக்குதல்களில் எவர் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக உரிய தரப்பினர் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இஸ்லாம் அமைதியையும், சமாதானத்தையும் விரும்புகின்ற, பயங்கரவாதத்திற்கு இடமளிக்காத மார்க்கமாகும். இவ்வாறான மனிதபிமானமற்ற தாக்குதல்கள் உலகலாவிய ரீதியில் ஒற்றுமையையும், சமாதானத்தையும் சீர் குலைப்பவையாகவே இருக்கின்றது.



இப் பயங்கரவாதத் தாகுதல்களுக்கு இலக்காகி உயிர் நீத்த மக்களுக்காக அனைவரும் பிராத்திக்குமாறும், மறைவான ஜனாஸா தொழுகையை ( الصلاة على الميت الغائب) தொழுமாறும், இது விடயத்தில் உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் நிருவாகிகள் கூடய கவனம் செலுத்துமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.

தாக்குதலில் உயிர் நீத்தவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து உயர்ந்த சுவனத்தை வழங்க வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிராத்தனை செய்கின்ற அதே நேரம் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.


அஷ்-ஷைக் எம்.எச் உமர்தீன் 
பிரச்சாரக் குழு செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment