ரத்கம கொலைகள்: 7 பொலிசார் மற்றும் வன பாதுகாப்பு ஊழியர் கைது! - sonakar.com

Post Top Ad

Monday, 18 March 2019

ரத்கம கொலைகள்: 7 பொலிசார் மற்றும் வன பாதுகாப்பு ஊழியர் கைது!


ரத்கம பகுதியில் இரு வர்த்தகர்கள் கடத்தி, எரியூட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் ஏழு பொலிசார் மற்றும் வன பாதுகாப்பு ஊழியர் ஒருவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் சீருடையில் வந்தவர்களால் ஜனவரி மாதம் கடத்தப்பட்ட வர்த்தகர்கள் எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் இன்ஸ்பெக்டர் ஒருவரும் முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.



இந்நிலையில், மேலும் ஏழு பொலிசார் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment