இலங்கையில் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில் இருவரைத் தெரிவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
102 விண்ணப்பதாரிகளிலிருந்து வெளிநாட்டவர், பெண்கள் போக 79 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ள நிலையில் அதிலிருந்து இருவரைத் தேர்ந்தெடுக்கப் போவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனையை அமுல்படுத்தப் போவதாக ஜனாதிபதி தெரிவித்து வருகின்ற அதேவேளை சர்வதேச ரீதியில் அதற்கான எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment