வெள்ளவத்தை, அடுக்கு மாடி வீட்டுத் தொகுதியொன்றில் குடியிருந்த சீனப் பெண்ணொருவர் (40) தனது வீட்டுக்குள் சுமார் 2 லட்ச ரூபா பெறுமதியான கள்ளச்சாராயம் களஞ்சியப்படுத்தி வைத்திருந்துள்ளமையை கண்டு பிடித்துள்ளனர் பொலிசார்.
குறித்த பெண், சீனாவிலிருந்து ஒரு வகையான போதைப் பானத்தை கொண்டு வந்து அதனை இலங்கையில் வைத்து கலந்து கள்ளச்சாராயம் உற்பத்தி செய்து வந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சுமார் ஆறு வருடங்களாக குறித்த பெண் இவ்வாறு இயங்கி வந்துள்ளதாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment