பொலிசாரின் சமிக்ஞையை உதாசீனம் செய்து தப்பிச் சென்ற லொறியொன்றை மடக்கிப் பிடித்த நிலையில் குறித்த லொறியிலிருந்து 250 கிலோ கிராம் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள், மின் வெடித்தூண்டிகள் மற்றும் ஜெலடின் குச்சிகளை கைப்பற்றியுள்ளனர் விசேட அதிரடிப்படையினர்.
ஹம்பாந்தோட்டை, பஹல அந்தரவேவ பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் பொலிசாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே வாகனத்தை நிறுத்த முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத ஆயுதங்கள், வெடிபொருட்கள், போதைப்பொருட்கள் தொடர்ச்சியாக கைப்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment