19 நாள் மஹிந்த ஆட்சியில் 4500 சமுர்தி அதிகாரிகளை நியமித்த விமல்! - sonakar.com

Post Top Ad

Friday 15 March 2019

19 நாள் மஹிந்த ஆட்சியில் 4500 சமுர்தி அதிகாரிகளை நியமித்த விமல்!


மஹிந்த ராஜபக்சவின் கூற்றுப்படி, கடந்த ஒக்டோபர் 26ம் திகதி முதல் 19 நாட்கள் நிம்மதியாக இடம்பெற்ற ஆட்சிக்காலத்தில் 4500 சமுர்தி அதிகாரிகளை விமல் வீரவன்ச நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


எனினும், அவையனைத்தும் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார் அமைச்சர் பி.ஹரிசன்.


மொத்தமாக 14,500 பேருக்கு விமல் வீரவன்ச இவ்வாறு நியமனங்களை வழங்குவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் 4500 பேருக்கே அவசரமாக நியமனங்களை வழங்கியுள்ளதாகவும் தற்போது அவை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment