எதிர்வரும் ஏபிரல் 10ம் திகதிக்குள் மின்சார விநியோக பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் எனவும் அதன் பின் மின் வெட்டு நிகழாது எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் அமைச்சர் ரவி கருணாநாயக்க.
முன்னிருந்தவர்கள் எதிர்கால திட்டமிடலின்றி செயற்பட்டதன் விளைவும், இயற்கையின் ஒத்துழையாமையும் மின் வெட்டுக்கான காரணங்கள் என தெரிவிக்கும் அவர், விரைவில் தீர்வைக் காணவுள்ளதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் நுரைச்சோலை ஜெனரேட்டர் பழுதடைந்ததைத் தொடர்ந்து தினசரி மின் வெட்டு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment