நாட்டில் நிலவும் அரசியல் சர்ச்சைகளுக்கு ஒரே தீர்வு தேர்தலை நடாத்துவது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள நிலையில், சட்டரீதியான அரசொன்று இல்லாமல் தேர்தலை நடாத்த முடியாது என அவருக்கு பதிலளித்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.
நாடாளுமன்ற பெரும்பான்மையுள்ள குழு ஆட்சியமைத்து அதன் பின் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனவும் தேர்தலை சந்திக்க எந்த அச்சமும் இல்லையெனவும் கபீர் ஹாஷிம் விளக்கமளித்துள்ளார்.
இன்று இரவு ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களுடன் இடம்பெறவிருந்த சந்திப்பை ஜனாதிபதி நாளை ஒத்தி வைத்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment