மட்டக்களப்பு, வவுண தீவு சோதனைச் சாவடியில் இரு பொலிசாரைச் சுட்டுக் கொன்றது முன்னாள் புலிகள் அமைப்பின் உளவுப்பிரிவு பொறுப்பாளி ஒருவர் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் மாவீரர் தினத்தை ஒழுங்கு செய்வதற்கு குறித்த நபர் அங்கு வந்திருந்ததாகவம் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு பொலிசாரைக் கொன்று விட்டு தப்பியோட முனைந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
2004க்கு முற்பட்ட கருணாவை யாரும் மறக்க வேண்டாம் என விநாயகமூர்த்தி முரளிதரன் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இக்கொலைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment