கடந்த ஒரு மாதத்திற்குள் பல தடவைகள் கட்சி தாவிப் புகழ்பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் வசந்த சேனாநாயக்க இன்று மீண்டும் மஹிந்த அணிக்குத் தாவி விட்டதாக வெளியான தகவல்களை நிராகரித்துள்ளார்.
தான் இன்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே இருப்பதாகவும் மீண்டும் கட்சி தாவும் எண்ணமில்லையெனவும் அலரி மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், வசந்த தொடர்பில் தொடர்ந்தும் சந்தேகம் நிலவி வருகின்றமையும் நீதிமன்ற தீர்ப்பினையடுத்து இவ்வாறு பல பேர் கட்சித் தாவலில் ஈடுபடக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment