ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இனியும் இணைந்து இயங்காது என தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
நேற்றிரவு ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பையடுத்தே இவ்வாறு தெரிவிக்கின்ற அவர், ரணிலுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்பதை விடவும் தமது கட்சியினர் திரும்பவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றக் கூடாது என்பதில் மைத்ரி திடமாக இருப்பதாக உதய கம்மன்பில தெரிவிக்கிறார்.
எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரையே இவ்வாறு மைத்ரி வலியுறுத்துவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த அதிருப்தி அணி இணைவதைத் தடுக்க முடியாத சூழலே நிலவுவதாகவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment