ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவைப் பட்டியலில் நேற்றிரவு இறுதியாக 32 பேர் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்கள் மத்தியில் இதனை 30 ஆகக் குறைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை கோரியுள்ளார்.
இதன் போது, தானும் ரிசாத் பதியுதீனும் அமைச்சரவைப் பதவி அவசியமில்லையென தெரிவித்ததாக மனோ கணேசன் தெரிவிக்கிறார். இதேவேளை மலிக் சமரவிக்ரமவும் பதவியின்றித் தொடர இணங்கியுள்ள நிலையில் அமைச்சரவை 30 ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, தமது நாட்டில் 16 பேர் கொண்ட அமைச்சரவையே இருப்பதாக இலங்கைக்கான நெதர்லாந்து தூதர் நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment