நீதிமன்றம் மஹிந்த அரசுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மைத்ரி - ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களுடனான சந்திப்பு இணக்கப்பாடு எதுவுமின்றி நிறைவுற்றுள்ளது.
தற்போது நிலவும் அரசியல் குழப்ப நிலைக்கான முடிவொன்றை எட்டும் சந்திப்பாக எதிர்பார்க்கப்பட்ட போதிலும், மீண்டும் இணக்கப்பாடின்றி இச்சந்திப்பு நிறைவுற்றிருப்பதுடன் ஜனாதிபதி நாடாளுமன்றைக் கலைக்க விடுத்திருந்த உத்தரவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு 7ம் திகதி எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்றைய சந்திப்பில் மாற்றம் எதுவும் நிகழவில்லையென ஐ.தே.மு தலைவர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment