விட்டு ஒதுங்குவதுதான் மஹிந்தவின் ஒரே தெரிவு: ரணில்! - sonakar.com

Post Top Ad

Monday 3 December 2018

விட்டு ஒதுங்குவதுதான் மஹிந்தவின் ஒரே தெரிவு: ரணில்!


பொதுத் தேர்தலை எதிர்கொள்ள முன்பாக ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசை மீள நிறுவுவதே தலையாய கடமையென தெரிவிக்கும் ரணில் விக்கிரமசிங்க, உடனடியாக தனது பதவி மோகத்தை விட்டு ஒதுங்குவதுதான் மஹிந்தவுக்கு இருக்கும் ஒரே தெரிவு என தெரிவித்துள்ளார்.



பொதுத் தேர்தலை நடாத்துவதே ஒரே வழியென நேற்றைய தினம் மஹிந்த தெரிவித்திருந்த நிலையில் அரசாங்கம் ஒன்று இல்லாத நிலையில் தேர்தலை நடாத்த முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி பதிலளித்திருந்தது. சபாநாயகரும் இதையே வலியுறுத்தி வந்த நிலையில் இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றம் மஹிந்த மற்றும் அவரது அமைச்சர்கள் அரசாங்கமாக இயங்குவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்நிலையிலேயே காலியில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி கூட்டத்தில் வைத்து ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment