ஐக்கிய தேசிய முன்னணியினர் ஆரம்பித்திருந்த சத்தியாக்கிரக போராட்டத்தையும் முடித்துக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தம்பர அமில தேரர் முன்நின்று ஆரம்பித்து வைத்த இப்போராட்டத்தில் அவ்வப்போது அரசியல் தலைவர்களும் சென்று அமர்ந்து வலுவூட்டியிருந்தனர். தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து மீண்டும் ரணில் தலைமையில் அரசமையும் எனும் நம்பிக்கை உருவாகியுள்ள நிலையில் தாமும் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் தம்பர அமில தேரர் லிட்ரோ கேஸ் நிறுவனத்திலிருந்து மாதாந்த ஊதியம் பெற்று வந்ததாகவும் அவர் பற்றி தகவல்கள் வெளியாகியிருந்தமையும் அது தாம் சார்ந்த அமைப்புக்கு வழங்கப்பட்ட நிதியென அவர் விளக்கமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment