ஐக்கிய இராச்சிய பிரதமர் தெரேசா மே, தனது கட்சித் தலைமைப் பதவியைத் தக்க வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகிக் கொள்ளத் தீர்மானித்திருந்த நிலையில் அதற்கான முன்னெடுப்பை மேற்கொண்ட மே, அதனை முறையாக செய்து முடிக்கவில்லையென பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில், அவரது தலைமைப் பதவி மீது கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையிழந்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.
இப்பின்னணியில் இன்று மாலை உள்ளூர் நேரப்படி அவருக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பொன்ற கட்சி மட்டத்தில் இடம்பெறவுள்ளது. இதேவேளை, நாடாளுமன்றிலும் அவருக்கு எதிராக நம்பிக்கை நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோபின் நெருக்குதலுக்குள்ளாகியுள்ளமையும் அதனை அவர் இதுவரை நிராகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment