ரணில் மீதான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்: 117 பேர் ஆதரவு! - sonakar.com

Post Top Ad

Wednesday 12 December 2018

ரணில் மீதான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்: 117 பேர் ஆதரவு!


ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் பிரேரணை 117 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.


சஜித் பிரேமதாசவினால் இன்று கொண்டு வரப்பட்ட குறித்த பிரேரணை மீதான இலத்திரனியல் வாக்கெடுப்பை நடாத்திய சபாநாயகர், 117 பேர் ஆதரவளித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக இரு தடவைகள் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள அதேவேளை ரணில் மீதான நம்பிக்கை பிரேரணையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றின் தீர்ப்பும் மைத்ரியின் அடுத்த கட்ட நடவடிக்கையும் சர்வதேச அவதானத்தைப் பெறும் என்பதும் ஜே.வி.பி பிரேரணையை ஆதரிக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment