ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நாட்டைப் பிளவுபடுத்தும் வகையிலான இரகசிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக மஹிந்த அணியினர் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தை மறுதலித்துள்ளார் சஜித் பிரேமதாச.
சமூக வலைத்தளங்களில் மிகத்தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பிரச்சாரம் இனவாதமாக உருவெடுத்து வருகிறது. இந்நிலையில் சஜித் இதனை நிராகரித்துள்ள போதிலும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராவதை தமிழரசுக் கட்சி ஆதரித்ததன் பின்னணி இதுவே என மஹிந்த தரப்பு தெரிவித்து வருகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிறுபான்மை சமூகங்களுக்கென தனித்தனி பிரிவுகளை வைத்து இயக்கி வருகின்ற அதேவேளை அதன் பிரதான பிரிவு சிங்கள தேசிய கொள்கையின் அடிப்படையிலேயே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment