க.பொ.த சாதாரண தர ஆங்கிலப்பாட பரீட்சையின் விடைகளை பரீட்சார்த்தி ஒருவருக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பிய ஆசிரியையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலங்கொடயில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை ஆசிரியையும் தனது பாதணியில் கைத்தொலைபேசியை மறைத்து வைத்திருந்த பரீட்சார்த்தியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.
வேறு ஒரு பரீட்சை நிலையத்தில் எஞ்சியிருந்த வினாத்தாள் ஒன்றை உபயோகித்து அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த குறித்த ஆசிரியை இவ்வாறு குறுந்தகவல் மூலம் விடைகளை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment