இலங்கைக்கு பெடரல் ஆட்சிமுறையே சிறந்தது எனவும் அதற்கேற்ப அரசியலமைப்பு சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கிறார் இந்தியாவின் சர்ச்சைப் பேர்வழியும் மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பருமான சுப்பிரமணிய சுவாமி.
இந்தியா இது தொடர்பில் முக்கிய பங்களிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்ற அவர், இலங்கையின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரே வழி பெடரல் ஆட்சி முறையே என்கிறார்.
எனினும், மஹிந்த ராஜபக்ச அதற்கு எதிரானவராகவே இதுவரை தன்னை சத்தரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment