MP பதவியை இழப்பார்களா மஹிந்த - நாமல்? தீர்ப்பின் பின் முடிவு: அமரவீர! - sonakar.com

Post Top Ad

Sunday 2 December 2018

MP பதவியை இழப்பார்களா மஹிந்த - நாமல்? தீர்ப்பின் பின் முடிவு: அமரவீர!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையைக் கைவிட்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களாக இணைந்து கொண்ட மஹிந்த, நாமல் மற்றும் மஹிந்த அணியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) உறுப்பினர்களது நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படுமா என்பது தொடர்பில் டிசம்பர் 7 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே தீர்மானிக்கப்படும் என்கிறார் மஹிந்த அமரவீர.



தற்போதைய அரசியல் சட்டத்துக்கமைவாக ஒரு கட்சியின் உறுப்பினர் வெளியேற்றப்பட்டாலோ, இராஜினாமா செய்தாலோ, தான் தெரிவான கட்சியிலிருந்து விலகினாலோ அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழப்பார் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை ஒரே நபர் இரு கட்சிகளில் உறுப்புரிமை கொண்டிருக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மஹிந்த அணியினர் சுதந்திரக் கட்சியை விட்டு விலகுவதாக இராஜினாமா கடிதம் தரவில்லையெனவும் அமரவீர விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment