சர்வதேச எண்ணை விலைக்கேற்ப கூடிக்குறையும் வகையிலான சூத்திரத்தை ஐக்கிய தேசியக் கட்சி அரசே அறிமுகப்படுத்தியிருந்தது என தெரிவித்துள்ள மங்கள சமரவீர, தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலை இன்னும் குறைய வேண்டும் என தெரிவிக்கிறார்.
ஒக்டோபர் 26 அளவில் 80 டொலர் இருந்த எண்ணை விலை தற்போது 57 டொலராகக் குறைந்துள்ளதாகவும் இதன் பின்னணியில் ஐந்து ரூபாயாலன்றி அதை விட அதிக தொகையால் எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு மேற்கொள்ளும் முயற்சியின் பயனாக விலைக் குறைப்பு இடம்பெறுவதாக விளக்கமளிக்கப்பட்டு அண்மையில் ஐந்து ரூபாய் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment