மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக இரு தடவைகள் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் 12ம் திகதி ரணில் மீதான நம்பிக்கை பிரேரணையொன்றை கொண்டுவரப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியைத் தர முடியாது என மைத்ரிபால சிறிசேன தெரிவித்து வரும் நிலையில் இப்பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது. இந்நிலையில் இவ்விடயத்தில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ள ஜே.வி.பி தாம் ஆதரவளிக்கப் போவதில்லையென தெரிவித்துள்ளது.
ஜே.வி.பி இல்லாமலே 117 உறுப்பினர்களின் ஆதரவை ரணில் விக்கிரமசிங்க தக்க வைத்து வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில் அக்கட்சி இவ்வாறு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment