தாம் பதவியை எதிர்பார்த்து அரசியல் செய்யவில்லையென தெரிவிக்கிறார் நீதிமன்றினால் பிரதமர் பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச.
பன்னிபிட்டியவில் இன்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டபின் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், பதவிகள் இல்லாமலும் தாம் அரசியல் செய்ததாகவும் மக்கள் தம் பக்கம் இருக்கும் வரை தமது அரசியல் பயணம் தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்குவதற்கு எதிர்வரும் 12ம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ள அதேவேளை நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான விசாரணைகள் முடிவுற்றுள்ள நிலையில் நாளை மறுதினம் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment